Ozhivudivasathe Kali (2015)

Ozhivudivasathe Kali    இனிய  நாளில்  ஒரு   விளையாட்டு  என்பதே படத்தின்  பெயருக்கான  விளக்கம்  என்று  நினைக்கின்றேன் . மலையாள  எழுத்துலகில் சிறந்த  எழுத்தாளரின்    சிறுகதை  தான்  இந்த  Ozhivudivasathe Kali , அதே  பெயரில்  வெளிவந்து  பல  பிரதிகள்  விற்று  அதிகம்  பேசப்பட்ட  ஒரு  சிறுகதயைத்தான்  திரைப்படமாக்கி இருக்கிறார்கள்  . இந்த  திரைப்படத்தை சனல் சசிகுமார்  இயக்கி  இருக்கிறார் . மொத்தமாகவே எழுபது  ஷாட்கள்  மட்டும்  கொண்டு  எடுக்கப்பட்ட  அதே  சமயத்தில்  திரைக்கதை  வசனம்  ஏதும்  எழுதாமல்  ஸ்பாட் ல்    இயல்பான நண்பர்களுடான  கலந்துரை  தான் அதற்க்கான  எந்த  மெனக்கெடலும்  இல்லை , மது அருந்துவது  தான்  கிட்ட  தட்ட  அதிகமான  காட்சிகளே  என்றாலும்  அதுவும்  இயல்பானவை  தான்  பார்க்கும்  பொது  புரியும்  என்கிறார்  இயக்குனர் .





அரசியல் விடுமுறையில்  ஐந்து  நண்பர்கள் சந்தோசமாக  ஒரு  ட்ரிப்  அடிக்கலாம்  என்று  முடிவு  செய்கிறார்கள் . அப்படி  ஒரு  மகிழ்ச்சிக்கு  மேல்  மகிழ்ச்சி  தரக்கூடிய  ஒரு  இடத்தில்   ஐவரும்  ஒன்று  கூடி கேலி  கூத்து  அரட்டை  மது ன்னு  சந்தோசமாகத்தான்  செல்கிறது . அங்கு  சமைத்து  சாப்பிட  ஒரு கோழியையும்  பிடித்து  கொண்டு  தான் செல்கிறார்கள்  .   சரக்கு  உள்ளே  இறங்க  இறங்க  அவர்களுக்குள்  இருக்கும்  அந்த  கசப்பான மனிதன்  வெளியே  வருகிறான் . பிறகு  சிறு  சிறு  சண்டை  சச்சரவுகளில்  முடிய . மீண்டும்  ஒன்று  கூடி  அடுத்த  சரக்கு  பாட்டிலை  காலி  செய்கிறார்கள் . பின்பு  பெண்ணை  பற்றி  பேசி பிறகு அரசியல்  சாதி  ன்னு  நகருகின்றது . அடுத்த  பாதி ஒரு  விளையாட்டு  விளையாடலாம்  என்று  தீர்வு  செய்கிறார்கள், அதென்ன  விளையாட்டு . என்ன  ? என்பதெல்லாம்  திரைப்படத்தை  பார்த்து  தெரிந்துகொள்ளவும் .

ஒரு  திரைப்படம்  மக்கள்  மத்தியில்  அதிகம்  பேச  படுகிறது . பார்க்கும்  நம்மை  அந்த  இடத்தை  விட்டு  நகராமல்  முழுவதும்  பார்த்து  விட்டு நகர  செய்கிறது . பார்த்த முடித்த  பிறகு  கனவிலும்  நம் கண்  முன்  வந்து  செல்கிறது.  என்றால்  அதுவே  நம்மை  வெகுவாக  கவர்ந்த  ஒரு  திரைப்படம்  என்போம் . அப்படி  ஆரம்பத்தில்  தொடங்கும்  முன்பு  ஒரு  ட்ராக்கில்  செல்லும்  கதை பின்பு  பெண்,பணம் , நட்பு, அரசியல் ஊழல், சாதி , வண்ண பாகுபாடு.  என்று  ஒட்டுமொத்த  கதையும்  நமக்கு சொல்லாமல்  சொல்லி  விட்டு  ஒரு  வித  பயத்தையும்  வடிவமைத்து  செல்கிறது  இந்த  திரைப்(பா)டம்  .

பொதுவாக  படத்தின்  கதை  சொல்வது  எனக்கு  நிச்சயமாக  பிடிக்காது  , இருந்தாலும்  பார்த்தே  தீர  வேண்டிய  திரைப்படத்தை  ஏன்  பார்க்க  வேண்டும்  என்று  சிறு  சிறு  வார்த்தைகளை  சொல்ல  போய்  ஒரு  சில  சுவாரசியங்களை  உடைக்க  நேரிடும்  ஆகையால் . படத்தினை  பார்த்துவிட்டு  மேலும்  தொடருமாறு  கேட்டுக்கொள்கிறேன் ....

அப்ப   வரும்  இப்ப  வரும்  ன்னு  வெகுநாள்  காத்திருந்த  பிறகுதான்  இந்த  திரைப்படத்தை  என்னால்  காண  முடிந்தது . 2015 கேரள  திரைப்பட  விழாவில்  திரையிட பட்டு  பலரால்  பாராட்டப்பட்ட  இந்த  திரைப்படம்  சென்னையில்  வெளிவந்தது  . முழுவதுமாக  ஒரு  வாரம்  மட்டுமே  திரையில்  இருந்தது .சரி  ஒரிஜினல்  டிவிடி  வரும்  வாங்கி  கொள்ளலாம்  ன்னு  இருந்தேன்  . தற்போது  நண்பர்  ஒருவரின்  மூலம்  படம்  கிடைத்தது  . சிறந்த  திரைப்படத்திற்கான  விருதையும் , சிறந்த சவுன்ட் செட்டிங்க்ஸ்  காண  விருதையும்  பெற்றது , ஒவ்வொரு  காட்சியிலும்  வரக்கூடிய  சிறு  சிறு இயற்கையான   இசை  சேர்ப்பின்  மூலமும், ஒளிபதிவாளர்  காட்சி  படுத்துவதன்  மூலமும்  நம்மை  திரைபடத்திற்கு உள்ளவே  அழைத்து  செல்கிறார்கள் . எனக்குமே  இப்படியே  சென்றால்  சந்தோசமாக  தான்  இருக்கும் என்று  தோன்றியது .

அதில்  ஒரு  பெண்  கதாபாத்திரம் . கதைக்கு  தகுந்த  சூழலில்  இருக்கும்  7 கதாபாத்திரங்களில் முக்கிய  கதாபாத்திரம் . ஒரு  திரைப்படம்  தொடங்கும்  முதல்  ஐந்து  அல்லது  பத்து  நிமிடத்திலேயே  அடுத்த  என்ன  நடக்க  போகிறது  என்ன  ?  என்பதனை  நம்மால்  யூகிக்க  முடியும் . அப்படி  பார்வையாளன  யூகித்த   நம்மை  இல்லை  இது  வேற  விதமான  கதை  . என்று  ஆர்வத்தை  அதிகரிக்க  செய்கிறது .

படத்தின்  முன்னோட்டத்தில் வரும் அந்த  குறியீடு அந்த  விளையாட்டு  தான்  ஹீரோ . அதென்ன  விளையாட்டு ? அதற்க்கான விதிமுறை ? என்ன  மாதிரியான  வாழ்க்கை  வாழ்ந்து  கொண்டு  இருக்கிறோம்  . நம்முடைய  சூழலில் மனிதர்களின்  கசப்பான  மற்றுமொரு  முகம்  எப்படி  பட்டது  . என  சொல்லலாமல்  சொல்லி  விடும் .


சிறுவயதில்  ஒவ்வொருத்தர்  வீட்டிலும்  அம்மா வெளிய  போகாத  பசங்கலோட  சேந்து  எங்கயும்  சுத்தாத ன்னு  சொல்லுவாங்க  அது  உதாரணமும்  சொல்லுவாங்க  . அது  எல்லாம்  நினைவுக்கு  வர  வாய்ப்பு  இருக்கலாம்  . படத்தை  பற்றி  நிறைய  பேசலாம்  பார்த்து  விட்டு  வாருங்கள்  கண்டிப்பாக  பேச  பட  வேண்டிய  படம்  வந்த  புதிதில்  தான்  பார்க்க  முடியவில்லை இப்போதவாது  பார்க்கலாமே . என்  பார்வையில்  ஒரு  விதத்தில்  இது  பக்கா  அரசியல்  படமுன்னும்   சொல்லுவேன்  .

நன்றி

#சிவஷங்கர் 

Post a Comment

أحدث أقدم