Children of Heaven (1997) நான் பார்த்த முதல் ஈரானிய படம் குழந்தைகள் திரைப்படம்




ஒரு திரைபடத்தின் மூலம் நம்மை அனைவரையும் கவர வைக்க முடியும். என்பதற்கு உதராணமாக கண்டிப்பாக இந்த படத்தை சொல்லலாம்..ரொம்ப நாளாகாவே பார்க்க வேண்டும் என்று இருந்தேன்.. இத்தனை நாளாய் பார்க்க வில்லை ஏன் என்றால் படம் முழுவதும் எனக்கு கிடைக்க வில்லை கடைசி அரைமணி நேரம் வெறும் வாய்ஸ் மட்டும் தான், திரைகாட்சி இல்லை. பொருத்தது போதும் ன்னு அழித்துவிட்டு வேறொரு நல்ல பிரிண்ட் ல் தராமான தரத்துடன் பார்த்து மகிழ்தேன்..



<3 span=""> ஈரான் நாட்டு சிறந்த இயக்குனர்களில் ஒருவர் மஜீத் மஜிதின் <3 span=""> . நான் ஒரு ஆறு ஏழு ஈரானிய மொழி படங்கள் பார்த்து இருப்பேன் .. அதில் இவர் இயக்கிய மூன்று படங்கள் இருக்கும் மூன்று என்னை மிக மிக கவர்ந்த படம் ஏழ்மையை புரிய வைத்த மற்றும் அந்த நாட்டு சமூகத்தை தெரிந்துகொள்ள வைத்த .மீண்டும் திரும்ப திரும்ப பார்க்க வைக்க கூடிய அழகான திரைப்படங்கள் .. உலக திரைஅரங்கில் வென்ற மற்றும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்ய பட்ட இந்த படம் என்னை வெகுவாக கவர்ந்தது..


<3 span=""> நிறைய பேரு படத்தை பார்த்து இருக்கீர்கள் #மகிழ்ச்சி .. பார்க்காதவர்கள் யாரவது இருந்தால் கட்டயாம் பார்த்துவிடுங்கள் அதற்காகவே படம் எடுத்திருகிறார்கள்.நான் மகேஷிண்டே பிரதிகாரம் படம் பற்றி ஒரு குழுவில் பேசி கொண்டு இருந்தேன் அப்போது அந்த ஆரம்ப காட்சி பற்றிதான்நிறைய பேசினோம் அந்த அளவுக்கு நிறைய பேருக்கு அத காட்சி பிடித்திருந்தது படமும் சூப்பர் .. அப்போதே ஒரு நண்பர் இந்த ஈரான் மொழி படத்தை நீங்க பார்க்க வில்லையா என்று கேட்டார். நானும் இல்லை இனிதான் பார்ப்பேன் ன்னு சொன்னே.. இப்போது பார்த்துவிட்டேன்..அந்த முதல் காட்சியை வெகுவாக ரசித்த நான் இந்த படம் முழும்காட்சியையும் ரசித்தேன். 


<3 span=""> அலி ஏழ்மை குடும்பத்தில் பிறந்த சிறுவன்..அவனுடைய தங்கை ஜாரா ... ஜாராவின் ஷுவை தெய்க்க கடைக்கு செல்கிறான் தெய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பையில் அந்த ஷுவை தொலைக்கிறான்.. வறுமையில் வாடும் அந்த குடும்பத்தில் திடீர் என்று புதிய ஷூ வாங்கவும் முடியாது . அம்மாவிடம் சொல்லி விடாதே எப்படியாவது கண்டு பிடிச்சிடலாம் ன்னு பென்சில் ,பேனா ன்னு தங்கைக்கு குடுத்து அப்புறம் வீட்டுக்கு சொல்லாமல் இருக்கிறார்கள் ..


<3 span=""> முதலில் ஜாரா பள்ளிக்கு செல்வாள் பிறகு அவன். அவளுக்கு ஷூ கட்டாயம் தேவை அதனால் அன்னணனின் ஷுவை காலையில் தங்கையும் ,மதியம் அண்ணனும் போட்டுக்கொண்டு பள்ளிக்கு செல்கின்றனர்.. ஜாரா தினமும் வர கொஞ்சம் தாமதம் ஆகிறது.அலி அத போட்டுகொண்டு பள்ளிக்கு செல்லவும் நேரம் ஆகிறது .ஒவ்வொரு முறையும் தன்னுடைய பிரின்ஸ்பால் யுடன் மாட்டி கொள்கிறான் ... இறுதியில் என்னதான் ஆனது?? தொலைந்த ஷுவை கண்டுபிடித்தார்களா? அது யாரிடம் இருந்தது? ஏன் அதை கேர்க்கவில்லை ? மீதி என்ன என்பதை நிச்சயமாக நீங்கள் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்..

<3 span=""> குறிப்பாக இப்படிப்பட்ட படங்களுக்கு எதையுமே தெரிந்துகொள்ளாமல் பார்க்கும் பொழுது நம்மை மிகவும் ரசிக்க வைக்கும்.. அப்புறம் ஏண்டா நீ சொன்னைலாம் கேக்காதிங்க .. கண்டிப்பா பாருங்க முடிந்தால் இந்த கதையாவது உங்கள் குழந்தைகளிடம் சொல்லுங்கள் இணக்கி நான் பாக்கும் பொது எங்க அம்மா ரெண்டு மூணு முறை வந்து இந்த படத்தை தமிழ போடுடா நான் பாக்றேன் ன்னு சொல்லுறாங்க. தமிழ ல இல்லமா நீங்க பாருங்க நான் கதை சொல்லுறேன் ன்னு சொன்னே

<3 span=""> குறிப்பாக நிறைய காட்சிகள் என்னை மிகவும் கவர்ந்தன ஒவ்வொன்று பற்றி தெளிவாக சொல்ல ஆசைதான் பதிவும் நீளமாய் கொண்டே போகும் அப்புறம் எல்லாம் சொலிட்டா நீங்க பாக்குற நேரமும் மிச்சம் ஆய்டும் .. அதனால நீங்க படத்தை நிச்சயமாய் பாருங்க.
எல்லோரயமே கவரக்கூடிய இயல்பான கதை முடிந்தால் எல்லோரும் பாருங்கள் subtitle உதவி கொண்டு மற்றவருக்கும் சொல்லுங்க என்ன சொல்றாகன்னு இதுபோல படங்கள் இன்னும் வந்தால் நன்றாக இருக்கும் ..

நன்றி

#சிவஷங்கர்

Post a Comment

أحدث أقدم