KUTRAM 23 (2017)

தமிழ்  திரைபடங்களுக்கு  பொதுவாக  நான்  பதிவெழுதுவது  இல்லை  ஏன்னா  அந்த  அளவுக்கு  எனக்கு  யூகிக்கும்  வல்லமையும்  புரிந்து  கொள்ள  கூடிய  அலாதியான  புரிதலும்  இல்லை . ஒரு  இரண்டு  மணி  நேரம்  என்னை  கவர்ந்த  படங்களை,  நான்  மற்றவருக்கு  பரிந்துரைப்பது  வழக்கம் . அந்த  வகையில்  வெகுநாளுக்கு  பிறகு  ஒரு  திரைப்படம் கட்டாயம்  எல்லோருக்கும் பரிந்துரைக்க  வேண்டும்  என்ற எதிர்பார்ப்பினை  என்னிடம்  உருவாக்கி உள்ளது .






அந்த  தூண்டுதலே  இந்த  பதிவினை  என்னை  எழுத  செய்கிறது  இது  ரீவுவ்  என்று  கருதினால்   அது  உங்கள்  கற்பனையே  . இயக்குனர்  அறிவழகன்  இயக்கத்தில்  வந்துள்ள குற்றம் 23 , கிட்ட  தட்ட   கடந்த  ஒரு  மாதம்  முழுக்க  நான்  திரையரங்கில்  பார்த்த , அத்தனை படங்களின் இடைவேளை   நேரத்தில் .  திரையிடப்பட்ட  இந்த  படத்தின்  முன்னோட்டம்  தான் நான்  பார்பதற்கு மிக  முக்கிய  காரணம்.  ஏன்னா ஒவ்வொரு  முறையும்  ஒரு  பரபரப்பை  உருவாக்கி  விட்டு  சென்றது .


இயக்குனர்  அறிவழகன்  அவரை  பற்றி  நான்  சொல்லிதான்  நீங்க  தெரிந்துகொள்ள  வேண்டும்  என்று  அவசியம் இல்லை . அவர்  இயக்கிய  மற்ற  படங்களே  அவரை  பற்றி  சொல்லும் . தமிழ் திரைத்துறைக்கு தேவையான  ஒரு  இயக்குனர் .  கதை  சொல்லி  படம்  பார்  என்பதில்  யாருக்குமே  உடன்பாடு  இல்லை . ஆகவே  சிறு  முன் குறிப்போடு  முடித்து  கொள்கிறேன் . ஆரம்பத்தில்  ஒரு பெண்  சர்ச்  பாதர்  உடன்  பாவ  மன்னிப்பு கேர்கிறாள் . கேட்டு  முடித்த  வுடன்  அந்த  பாதரும்  அந்த  பெண்ணும்  அந்த  இடத்திலே  இறகின்றனர் . அதன்  பிறகு  இந்த  கேஸ் இன்வெஸ்டிகேசன்  செய்ய  வருகிறது  . இது  கொலையா ? தற்கொலையா ? இல்லை  காத்தா  கருப்பா ?  எல்லாம்  பார்த்து  தெரிந்துகொள்ளவும் . 

தற்போதுள்ள  சமூகத்திற்கு    தேவையான ஒரு  கதையை  எடுத்துக்கொண்டு , அதனோடு  சமூக  கருத்தை  சேர்த்து , சிந்திப்பில் ஆழ்த்த  கூடிய  ஒரு  கதையமைப்பு தான் . ஆரம்பத்தில்  "கற்பனை  கதை"  என்றும், "இது   யாரையும்  குறிப்பிட  வில்லை"  என்றும்  குறிப்பிட்டு   இருந்தாலும்  . உற்று  கவனிக்க  வேண்டிய  விசியங்கள்  நிறையவே  திரையில்  உள்ளன . பார்பதற்கு  முன்பு  இது  ஒரு  இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் அவ்ளவுதான்  ன்னு  திரையில் அமர்ந்த   எனக்கு   தெரியாத  பல தகவல்களை  தெரிய  வைத்தது  . எனக்கு  மட்டும்  இல்லாமல்  திரையில்  அமர்ந்து  சிலருக்கும்  தான் .

ஆகவே  எந்த  ஒரு  எதிர்பார்ப்பும் இல்லாமல்  , அல்லது  எதிர்பார்ப்போடு  கிளம்பினாலும் ஏமாற்றம்  அடைய  வைக்காது , அதற்கு  வாய்ப்பு  இல்லைன்னு  தான்  நினைக்கிறன் . முக்கியமா  இந்த  திரைபடத்தில்  தேவையில்லாத  காட்சி  இதை  நீக்க  வேண்டும்  என்று  பார்த்தல்  அப்படி  ஒன்றும்  கண்ணுக்கு  படாது . வொர்த்  ஆனா  திரைப்படமா  , ஆகா  ஓகோ  ன்னு  சொன்னா  மட்டும்  தான்  பாப்பேன்  என்று  அடம்  பிடிப்பவர்கள் . அப்படியே  அங்கனே போகாதீங்க  உங்களுக்கான  படமில்லை, ஏன்னா  இதுல    பாட்டு  இல்ல  , ஓவர்  காதல்  ரொமேன்ஸ் காட்சிகள்  இல்லை , தண்ணி  தம்மு இரட்டை  வசனம்  இல்லை , தெறிக்க  விடுற  சண்டை  காட்சி  இல்லை , பறக்க  விடுற  அடியார்கள் , காமெடி  என்ற  பெயரில்  அப்படி இப்படி   ன்னு  எதுமே  இல்லை .

இன்று  வெளிவந்த இப்படம்  மக்கள்  மத்தியில்  நல்ல  வரவேற்ப்பையும் , பாராட்டுகளையும்  பெற்று  வருகிறது  என்பதை  சமூக  வலை தளத்தை  பார்க்கும்  போதே  தெரிகிறது . அதனில்  என்னுடைய  பங்களிப்பையும்  பகிர்ந்து  கொண்டேன்  அவ்வளவே  , மற்றபடி வேறொன்றும்  சொல்ல  வில்லை  . பார்ப்பவர்கள்  நிச்சயம்  பார்துவிட்டு  வாருங்கள்  நிறைய  பேச  வேண்டிய  கருத்துக்கள்  உள்ளன . 

குறிப்பு : குற்றம்  23 , இந்த  திரைப்படம்  அருண்  விஜய்க்கு ஒரு  மிக  முக்கியமான  திரைப்படம்  அதுமட்டும்  இல்லாமல்  இது  இவருடைய  இருபத்தி  மூன்றாவது  திரைப்படம்.  அதெல்லாம்  விட  நம்  மக்களுக்கு  தேவையான  திரைப்படம் . பார்க்கவும்  திரையில்  ,  தவறவிட்டு  வருத்த  பட  வேண்டாம் . 

நன்றி  

#சிவஷங்கர் 

Post a Comment

أحدث أقدم