Ottaal (2015) ஒரு சிறுவனின் கதை

வங்கா  என்ற  குறுங்கதையை மையபடுத்தி  எடுக்கப்பட்ட  ஒரு  அழாகான  கேரள  திரைப்படம் . நிச்சயமாக  அனைவரும்  பார்க்கவேண்டும் . பல  திரைப்படவிழாகளில்  கலந்துகொண்டு  வெற்றிகளை  சூடிய பாராட்டை  பெற்ற  திரைப்படம் 


கேரள அழகியலோடு  சேர்ந்து இயற்கையான  பல  கதாபாத்திரங்களை முன்னிறுத்தி . சமூகத்தில்  இன்னனும்  இப்படி  இருந்துகொண்டு  இருக்கிறது  என்று  முடித்திருக்கிறார்  இயக்குனர் , சமூகத்தில்  என்று  சொன்னவுடன்  பல  சிந்தனைகளை  நினைக்க  வேண்டாம் . இந்த  திரைப்படம்  சொல்லும் . நான்  சொல்லி  உங்கள்  எதிர்பார்ப்பை  வீணடிக்க  விரும்பவில்லை .

வாத்து  மேய்க்கும்  வயதானவர் அவருக்கு ன்னு  உறவு  என்று ஒரு  சிறுவன் . இருவரும் ஒரு  கிராமத்தை  வந்தடைகின்றனர் . அந்த  மாதிரி  ஒரு  கிரமாத்தில்   ஒருநாளாவது  இருக்க  வேண்டும் . அப்படி  சகல  அழகியலும் பொருந்திய  ஊர் . கள்ளங்கவடம் இல்லா  மனிதர்கள்  . ஒவ்வொரு  காட்சியயும்  வர்ணித்து  கொண்டே  இருக்கலாம். சிறுவன்   தாத்தாவிடம்  பேசும்  காட்சிகள்  அவனுடைய  அன்பான  மனசு . வசனங்கள்  என  பார்க்கும்  ஒவ்வொன்றையும்  செதுக்கி  இருக்கிறார்கள்  என்னால்  மறக்க  முடியாத  ஒரு  படமாக  இருக்க  போகிறது  . அனைவருக்கும்  அப்படிதான்  என்பதில்  மாற்று  கருத்து  இல்லை .

  அப்படி  ஒரு  அருமையான  சூழல் .   அவர்கள்  இருவருடன்  மட்டும்  இல்லாமல்  அங்கு  வசிக்கும்  நிறைய  நபர்களை  முன்  நிறுத்தி  செல்வார்கள்  உதரானத்திற்க்கு  அவன்  தோழன்,பெயரில்லா  நாய்  , போஸ்ட்  மென் , தினமும்  மீன்  தூண்டில்  போட்டு  மீன்  புடிக்கும்  முதியவர் .  பாடிக்கொண்டே  வேலையே  செய்பவர் , வழிகாட்டி என  மனதில்  இருந்து  நீக்கமறா  நினைவில் நிற்கிறது . 







இதுதான்  கதை  என்று  சொல்லிவிடலாம் . ஆனா சொல்ல  மனம்  ஒத்துழைக்க  வில்லை  பார்த்து  விடுங்கள்  நல்ல  திரைப்படம் . 2015 ஆம்  ஆண்டே திரைப்பட  விழாக்களில்  கலந்துகொண்டது , திரைக்கு  தற்போது  நவம்பர்  ஆண்டு தான்  வந்தது  அதே  சமயம்  இணையத்திலும்  அபிசியலாக வெளியிடப்பட்டது . பார்த்துவிட்டு  தங்கள்  கருத்துக்களை  பகிருங்கள் .

நன்றி 



#சிவஷங்கர்

Post a Comment

أحدث أقدم