A Bittersweet Life (2005) ஒரு விசுவாசியின் கதை

A Bittersweet Life , சமீபத்தில்  நான்  பார்த்த  கொரியன்  படங்கள்  தொகுப்பில்  இந்த  இயக்குனரின்  மூன்று  படங்கள்  இடம்  பெற்று  இருந்தன , மூன்றும்  மூன்றுவிதமான வகையில்  சுவாரஸ்யமான  முறையில்  கதை  சொல்லல் , விறுவிறுப்புக்கும் பஞ்சம்  இல்லாத  அந்த  படங்கள்  என்னை வெகுவாக   கவர்ந்து  விட்டன  இயக்குனருடைய  மற்ற  படங்களை  பார்க்க  வேண்டும்  என்கிற  எதிர்பார்ப்பை  இந்த  படங்கள் செய்துவிட்டன . A Bittersweet Life (2005) க்கு  வருவோம்  கதையின்  தொடக்கத்திலே  மரக்கிளைகள் அசைவுகளோடு ஒரு சில வரிகளுடன்  தொடங்கும். சீடன்  குருவிடம்  பேசுவது  போல  அது  என்னன்னு  பாக்கும்  பொது  தெரியும் . 





ஹீரோ தனது  முதலாளிக்கு  விசுவாசியாக  இருப்பவர் , அவரிடம்  சேர்ந்ததில்  இருந்தே  அவர்  சொல்லும்  வேலைகளை  மறுக்காமல்  செய்பவர் . ஒரு  நாள்  தான் வெளியூர்  செல்ல  போவதாகவும் . எனக்கு  ஒரு  காதலி  இருக்கா , சின்ன  பொண்ணு நான்  இல்லாத  நேரத்துல  அவளை  தேடி  ஒரு  இளைஞன்  வரமாதிரி  இருக்குது . நான்  வெளியூர் போயிட்டு  வரேன்  அதுக்குள்ள  அவங்க  ரெண்டு  பேரையும்  நீ  சந்திச்சா  எனக்கு  உடனே  கால்  பண்ணு  இல்லைனா  அவங்கள  கொன்று  விடு  ன்னு  சொல்லிவிட்டு  செல்கிறார் .

இவர்தான்  விசுவாசமான  ஆள்  ஆச்சே . அந்த  பெண்ணை  சந்திக்கிறான் , பாஸ்  உங்களோட  இருக்க  சொன்னார்  ன்னு  அங்க  போறார் , அந்த  பெண்  அதெல்லாம்  ஒன்னு  தேவை  இல்லைன்னு  சொல்லிடுறா , பார்க்க  ரொம்ப  சின்ன  பொண்ணா  இருக்கிறாள் . ஓரிரு  நாளில்  இவங்க  ரெண்டு  பேரையும்  சேர்த்து  பார்த்து  அந்த  அவள்  காதலனை   அடித்து  அவனுடைய  பாஸ்க்கு  போன்   செய்ய  தயாராக  இருக்கிறான் . இருந்தாலும்  இவளை  கொள்ள  அவனுக்கு  மனம்  வரவில்லை , அவர்களை  அப்படியே  விட்டு  விடுகிறான் . அவனை  இனி  நான்  உன்ன  இங்க  பாக்க  குடாது  என்கிற  மாதிரி  சொல்லி  விடுகிறான் .

இந்த  தகவல்  பாஸ்  க்கு  செல்ல , இத்தனை   நாள்  எனக்கு  விசுவாசியா  இருந்தவன்  . நான்  சொன்னதை  செய்யாம  விட்டுட்டான் , ன்னு  அவன  கொலை  செய்ய  சொல்லுகிறார் , அதே  மாதிரி  அவனை  அடித்து  சித்தரவதை  செய்து , கையை  உடைத்து மண்ணில்  புதைகின்றனர் . ஆரம்பத்தில்  எந்த  அளவு  சுவாரஸ்யம்  இல்லாமல்  கதை  நகர்ந்ததோ  அதை  விட  இரண்டு  மூன்று  மடங்கு  வேகம்  பிடித்து  நகரும்  , அவனுடைய  முதலாளியை  எதிர்த்து கிளம்புகிறான்  ? அவன்  எப்படி  தப்பித்தான் ? என்ன  நடந்தது ?  யார்  அந்த  பெண் ?  எல்லா  கேள்விக்கும்  படத்தில்  பதில்  இருக்கு .


கண்டிப்பாக  , நிச்சயமாக  ஆக்சன்  gangster விரும்பிகளுக்கு  மிகவும்  பிடிக்கும் . பின்னனி  இசையும்  கதாபத்திரங்களும்  கச்சித மாக  இருக்கிறது . இந்த  இயக்குனருடைய  மூன்று  படங்களிலும்  அந்த  நடிகரை  பார்க்கிறேன்  அட்டகாசமான   நடிப்பு , இயல்பாகவே  பொருந்துகிறார் , ஆல்   ஓவர்  ஒரத்  மூவி  கண்டிப்பா  பாக்லாம் .

நன்றி 

#சிவஷங்கர்

Post a Comment

أحدث أقدم