MOEBIUS ( 2013 ) கொய்யால அறுத்தே புடுவேன்

 எனக்கு  நல்லா  நியாபகம்  இருக்கு  காலேஜ்  சேர்ந்த  முதல்  வருசத்துலையே  இந்த  படத்தை  நான்  பார்த்தேன்  வெளில  ஒரு   சத்தம்  கூட  போடாம அந்த  முழு  படத்தையும்  பார்த்து  முடித்தேன் . அதை  எனக்கு  கொடுத்தவர்  இப்ப  ஆள்  அட்ரஸ் எங்க  இருக்கார்  ன்னு   தெரியல  . அதே  மூன்றாம்  ஆண்டு  வந்த  உடன் எங்க  வகுப்புல  பாக்காத  பசங்களே  இல்ல எல்லாரையும் பாக்க  வச்சாச்சு  எங்க  காலேஜ்  ல  பல  டிபார்ட்மென்ட்   க்கு  ட்ராவல்  ஆச்சு  அதுலாம்  வேற  கதை . மக்களே  இது  ரீவீவ்  அல்ல  அப்படி  ஏதாவது  தங்கள்  கண்களுக்கு  தென்பட்டால்  கம்பெனி  பொறுப்பல்ல .




இப்ப  நம்ப  கிம்  கி  டுக்  படத்தை  பற்றி  பேசுவோம் . இந்த  படத்தை  யாராச்சும்  பாக்லாமா?  என்று  கேட்டால்  வேற  லெவல்  படம்  பாருங்கன்னு  சொல்லுவேன் . "வேற  லெவல்" , "வேற  லெவல்"  ன்னு  சொல்லுறீங்களே  அப்படி  என்னதான்யா  இருக்கு! . சொல்லும் , சொல்லி  தொலையும்.  ன்னு  நண்பர்  ஒருவர் கேட்டு  இருக்கார் . பாஸ்  இது  உங்களுக்கு  மட்டும்  இல்லை  நிறைய  பேரு  கேட்டு  இருக்காங்க  ஆக  அல்லாருக்கும்  எனக்கு  புரிஞ்ச  அந்த  அவா  வை லைட்  ஆக  சொல்லி  விடுகிறேன்  .


இந்த  தலைப்பை  பார்த்த  வுடன்  நமக்கு  என்னா  தோணும்  இது  ஒரு  பேண்ட்   (கைக்கு  போடும்  பேண்ட்)   வகை    அதுதான் நினைவுக்கு  வரும் . இங்க  அந்த  பேண்ட்டுக்கும் படத்துக்கும்  சம்மந்தம்  இல்லை அத  மறந்துடுங்க  . இது  ஒருவிதமான டிராமா  கதை  அதிலும்  குடும்பத்தில்  நடப்பதால்  "குடும்ப  டிராமா"  ன்னு  நம்பளாவே   வச்சுக்கலாம்  . பாசு  அதுக்குன்னு  பச்சை  புள்ளங்க  இருக்கும்  பொது  படத்தை  போட்டுராதீங்க  ஒரு  18 , 20 வயசு  கடந்து  இருக்கோணும்    சொல்லிபுட்டேன் , அப்புறம்  அது  இதுன்னு  சண்டைக்கு  வரப்படாது . ஆமா  இந்த  படம்  யார்  பாக்லாம் . நீங்க  கிம்  கி  டுக்  படங்களை  ரசிப்பவரா  இருந்தால்  இந்த  கேள்வியை  கேக்க  மாட்ட்டீங்க .


 இருந்தாலும்  சொல்லுறேன்  . இந்த  படத்தை  கேரளா  திரைப்படவிழாவில்  திரையிட்டார்களாம்  , திரை அரங்கே  நிறைந்து  இருக்க  பெண்களும்   நிறைந்து  இருக்க , கிம்  கி  டுக்  உம்  திரைப்பட  விழாவுக்கு  வர  . படம்  திரையிடபட்டதாம் , ஆரம்பத்தில்  தொடங்கிய  ஆரவாரத்துடனே  இறுதி  வரை கை  தட்டலும்  கூச்சல்களுமாக  நகர்ந்து  இருக்கிறது.  என்பது  படத்தை  பார்த்த  ஒரு  கேரளா  காரர்  எழுதி  இருப்பதை  இணையத்தில்  மூலம்  படித்து  தெரிந்துகொண்டேன் . சிலர்   அதிர்ச்சிக்கு  உள்ளாளனர் , சிலர் மிரண்டும்  போயினர் ன்னு  சொல்லி  இருந்தார் . கொரியன்    நாட்டிலயே  தடை  செய்ய  கேரளாவில்  திரைப்படவிழாவில்  அரங்கம்  நிறைய  ஆரவாரத்துடன்  திரையிடப்பட்டு  இருக்கிறது  என்றால்  பார்த்துகொள்ளுகளேன்.

கதைய  எங்கருந்து  எப்படி  ஆரம்பிக்கலாம்,  எப்படி  சொல்லலாம்  ன்னு  நிறைய  நண்பர்கள்   படத்தை  பற்றி  சொல்லவே  யோசிக்கிறோம்.  ஆனா  அவர்  ஒவ்வொரு  முறையும்  ஒரு  படி  மேலே  ஏறி வித்தியாசமான   படங்களை  வெளி  விடுகிறார் . நண்பர்  ஒருவர் இந்த  படத்தை  பற்றிய  விமர்சனம்  ஒன்றில்  கமென்ட்  இட்டு  இருந்தார்  "இதுமாதிரி  ஒரு  படம்  நமது 100 வருட   தமிழ்  சினிமாவில்   இன்னும்  வரவில்லை"  என்று  சொன்னார் . 100 வருஷம்  இல்லை  இன்னொரு  300 வருஷம்  ஆனாலும்  டவுட்  தான் .


 அப்படியே  ஒருவேளை  முயற்சி  பண்ணி  இருந்தாலும்  சொல்றதுக்கு  ஒன்னும்  இருக்காது . அப்புறம்  அய்யய்ய  சொல்லுபவர்கள் , என்னடா  இதுலாம்  ஒரு  படம்  ன்னு  பதிவெழுத  வந்துட்டான்  ன்னு  சொல்லுபவர்கள் , நான்  ரொம்ப  நல்லவன்  ன்னு  முகமுடி  அணித்து  கொண்டிருக்கும்  நல்லவர்கள்  .  இன்னும்  தனக்கு  தானே  முடி  சூடா  மன்னன்  என்று  அவார்ட்  கொடுத்து  கொள்ளும்  நல்லவர்கள்  விலகி  கார்ட்டூன்  எதுனாச்சும்  பாருங்க . அப்படிப்பட்டவர்கள்  இதோடு  விலகி  பொழப்பை  பார்ப்பது  நலம் .


இது  ஒரு  ஊமை  படம்  என்பதால் . திரையில்  வரும்  முக்கிய  கதாபாத்திரங்கள்  மூவர்  யார்  என்று  புரிந்துகொள்ளவே  இன்னொரு  முறை  பார்த்தேன் . கொரியா  நாட்டில்  முதல்  திருமணத்திற்கு  பின்   ஒரு  சிலர்   கணவனுடன்  உறவு   முடிந்த  பிறகு  மற்ற  ஆண்களை  தேடி  விபச்சாரி  ஆக வும்  அல்லது  வேறொரு  திருமணமும்  செய்துகொள்வார்கள் . இதே  தான் ஆண்களும்  ஆண்  அவன்  விபச்சாரிகளிடம்  செல்பவனாக  மாறி  விடுவான் . ஆண்விபச்சாரி  ஆக  முடியாதே ;) .  ஆக  இந்த  இடத்திலேயே  நம் சூழலுக்கு  ஏற்ற  படம்  இல்லை  என்று  தெரிந்து  விடுகிறது , இங்கு  கதையில்     அப்பா  , அம்மா , அவங்களுக்கு  ஒரு  18 வயது  பையன்  (எல்லாம்  ஒரு  மனக்கணக்கு தான்) . தன்னுடைய  கணவன்  வேறொரு  பெண்ணுடன்  உறவு  கொண்டிருப்பதை  பார்க்கிறாள் .


தன்னுடைய  மகனும்  பார்த்து  விடுகிறான் . இதுவே  நம்ப  ஊரா  இருந்தா . கூட்டுரா சொல்வதெல்லாம்  பொய்   மேல  வெக்காத   கை நிகழ்ச்சிய  . இல்லாட்டி  நஜங்கள்  இது  உண்மைக்கான  தேடல் அப்படின்னு  கிளம்பி  அமர்கள  படுத்திடுவாங்க . அங்க  அந்த  வீட்டுக்காரம்மா நைட்டு  இவன்  படுதுருக்கும்  பொது  அவனோட ஆண்  உறுப்பை  அறுக்க  ஒரு கத்தியை  எடுத்துகிட்டு  ரூமுக்குள்  நுழைந்து  கிட்ட  தட்ட  நெருங்கி  விட்டால்.  அவன்  எப்படியோ  சுதாரிக்க . பக்கத்துக்கு  ரூமில்  தூங்கி  கொண்டு  இருந்த தன்னோட  மகன் . இவனும்  கொஞ்ச  நேரத்துக்கு  முன்னாடி  சுய  இன்பம்  கண்டு  கொண்டு  இருப்பான். அதையும்  பார்த்துவிட்டு  தான்  தாய்  செல்லுவாள்  அவனோட  ரத்தம்  தானே  இவன்  அப்பன்  புத்தி  தானே  மகனுக்கும்  வரும்  ன்னு  உலகத்துலேயே  எந்த  அம்மாவும்  செய்யாத  காரியத்தை  இந்த  அம்மா  செஞ்சிபுட்டு  அத  ஜெல்லி  சுவிங்கம்  மாதிரி  போட்டு  மென்று  விடுறாங்க . அறுத்தே  புடுவேன்  ன்னு  சொல்லி  கேட்டு  இருக்கிறேன் இதில்  தான்  பார்த்தேன்


அலறடித்து கொண்டு  கத்துகிறான் . இவனை  அவங்க  அப்பா  மருத்துமனையில்  சேர்த்து  அப்போதைக்கு  சிகிச்சை  கொடுத்து  காப்பாற்றி  கொண்டு  வந்து  விடுறாங்க . அதுக்கப்புறம்  அதுவே  இல்லாம பையன்  பல  கஷ்டம்  படுறான் . பையனுக்கு  இப்படி  இருப்பதை  தந்தையினால்  ஏற்று   கொள்ள  முடியவில்லை . அதுவே  இல்லாம  இனி  எதுவும்  இல்லை  . ஆனா  அதுக்குன்னு  இவர்  ஒரு  முயற்சில  இறங்குகிறார் . அதை  தன்னுடைய  மகனுக்கும்  சொல்லுகிறார் . இவர்  எப்படி  அதில்  இறங்கினார் . அந்த  பையன்  என்ன  ஆனா? , ஆக்சுவல் ஹா  இது  எதனை  முன்  வைக்கிறது  எல்லாம்  நான்  சொல்லி  பார்ப்பதை  விட  பார்த்து  விட்டு  வந்தால்  விளக்கமாக  பேசுவோம் . ஆரம்பத்துல  இருந்து  முடிவ  வர  நானே  சொல்லிட்டா  நீங்க  என்னத்த பாப்பீங்க .  யாரும்  முயற்சி  செய்யாதீங்க தோழரே ;)


கண்டிப்பாக  நிச்சயமாக  சத்தியமாக  . பெரியோர்களுக்கான படம் அதை  எல்லாம்  கொஞ்சம்  பார்த்துகொள்ளுங்கள் .  என்னை  கேட்டால்  இரண்டு  விதமான  பதில்  தருவேன்  வேற  லெவல்  படமும்  ன்னு  சொல்லுவேன்  . என்னை  சற்றே  திகைக்க  வைத்த   படமுன்னும்  சொல்லுவேன் ;) .       திருமண  மாணவர்கள்  மனைவி   உடன்  பார்ப்பதை  தவிர்த்து  கொள்ளுங்கள் .  பாதுகாப்பு  முக்கியம்  அமைச்சரே .

நன்றி

#சிவஷங்கர்

Post a Comment

أحدث أقدم